சிறுவர் முதல் முதியோர்
வரை அனைவருக்கும்
சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு
சுவையான பானம்
தேநீர். சுவையான
தேநீர் தயாரிப்பதும்
ஒரு கலை
தான். ஒரு
கப் தேநீர்
தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து
இரண்டு கொதி
வந்ததும் இறக்கி
வடிகட்டி அருந்தவும்.
சில வித்தியாசமான
சுவையான தேநீர்
தயாரிக்கும் முறைகளை பார்ப்போம்.
மசாலா டீ: ஏலக்காய்
6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன்
ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு
துண்டு, பட்டை
சிறிது இவற்றை
நைஸாக பொடி
செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்தும் இந்த
பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும்
சீனி, பால்,
சேர்த்து வடிகட்டி
அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக்கும்
அருமையான தேநீர்.
ரோஸ் டீ: தேநீர்
கொதிக்கும் போது புத்தம் புது ரோஜா
இதழ்கள் சிலவற்றை
போட்டு தேநீர்
தயாரிக்கவும். ரோஜா பூ இதழ்களை ஒரு
டப்பாவில் போட்டு
வைத்தும் தேவையான
போது உபயோகிக்கலாம்.
கோகோ டீ: குழந்தைகள்
சாக்லேட் மணம்
கொண்ட கோகோ
டீயை மிக
விரும்புவர். டீ தயாரிக்கும் போது தேவையான
கோகோ பவுடர்
சேர்த்து கொதிக்க
விட்டு பரிமாறவும்.
இஞ்சி டீ: அஜீரணம் வயிற்று
கோளாறுகளை நீக்க
வல்லது இஞ்சி
டீ. இஞ்சியை
தோலை சீவி
விட்டு நன்கு
நசுக்கி டீ
கொதிக்கும் போது சேர்த்து தேநீர் தயாரிக்கவும்.
ஏலக்காய் டீ: ஏலக்காய்களை
தோலுடன் பொடி
செய்து தேநீரில்
சேர்த்து கொதிக்க
விடவும். இனிப்புகள்
செய்ய ஏலப்பொடி
செய்யும் போது
ஏலக்காய் தோலை
எரியாமல் சேகரித்து
வைத்த உபயோகப்படுத்தலாம்.
எலுமிச்சை டீ: நீரை
கொதிக்கவிட்டு தேயிலைப்போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி
வடிகட்டவும். ஆறியதும் அதில் தேவையான எலுமிச்சை
சாறு பிழியவும்.
தேவையான சர்க்கரை
சேர்த்து சில
ஐஸ்கட்டிகளைப் போட்டு பால் இல்லாமல் குடிக்கவும்.
புதினா டீ: சில
புதினா இலைகள்,
துளசி இலைகள்,
இவற்றுடன் சிறுதுண்டு
இஞ்சியை நசுக்கி
போட்டு 4,5 மிளகைப்பொடி செய்து போட்டு நீரில்
கொதித்ததும் தேயிலை, சீனி, பால், கலந்து
வடிகட்டி அருந்தவும்..
இது ஜலதோஷம்
இருமல் இவற்றிற்கு
உடனடி நிவாரணம்
அளிக்கும்.
தேநீர் நம் இதயத்திற்கும்
நுரையீரலுக்கும் பலமளிக்கும் டானிக். நரம்பு, தசை,
மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு
தருகிறது. காபி
அருந்துவதைவிட தேநீர் அருந்துவது நல்லதே! அளவோடு
அருந்த வேண்டும்.
அளவுக்கு மீறினால்
நரம்புகளையும் வயிற்றையும் பாதிக்கும். மிக
சூடாக அருந்தும்
தேநீர் வயிற்றின்
உட்சுவர்களை புண்ணாக்கும்.
No comments:
Post a Comment