Saturday 29 June 2013


மருதாணியின் மூலிகை மருத்துவம்








மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது மருதாணி. நகசுத்தி வராமல் தடுக்கும், புண்களை  ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகுபடுத்தலாம்..

பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம், 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகியவற்றை  அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும் புண், அரிப்பு  ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.

இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில்  சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும்  தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம்  வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒரு சிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.


கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501  பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும்  சொறி, சிரங்கிற்கும் இதனை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நிற்கும்!

தக்காளியில் ஏராளமான வைட்டமின் சி மற்றும் இருக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும் லேசான அமிலத்தன்மையும் இருக்கும் தக்காளி, சின்னச்சின்ன சருமப் பிரச்னைகளுக்கு மருந்தாக அமைகிறது. எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தருகிறது. தக்காளியை அரைத்து முகத்தில் பூசி, ஒரு மணி நேரம் ஊறவிட்டு அப்புறம் குளித்தால், பரு பிரச்னை வராதாம்!

பயணங்களில் சிலருக்குக் குமட்டும். அப்படி குமட்டல் ஆரம்பிக்கும்போது, எலுமிச்சையைப் பிழிந்து, அந்த சாறை சில துளிகள் பருகினால், வாந்தி வருவது போன்ற உணர்வு விலகும்.

டென்ஷன் தலைவலிக்கு சிறந்த தீர்வு தருகிறது பென்சில். டென்ஷனில் நம்மை அறியாமல் நறநறக்கும்போது, தாடைகள் இறுகிவிடுகின்றன. பற்களுக்கு இடையே ஒரு பென்சிலை வைத்து மென்மையாகக் கடித்தால், தாடை தசைகள் தளரும். தலைவலியும் குறையும்.

டிராபிக் நெரிசலில் வாகனம் ஓட்டுவது டென்ஷனை ஏற்படுத்துகிறதா? வாயில் ஒரு பெப்பர்மின்ட் போட்டு மென்றபடி ஓட்டுங்கள். டென்ஷன் குறையும். சீக்கிரமே பயணம் முடிந்ததுபோன்ற உணர்வு ஏற்படும்.

விக்கலை விரட்ட எளிய வழி... ஒரு ஸ்பூன் சர்க்கரையை அப்படியே வாயில் போட்டு விழுங்குங்கள். நாக்கில் திடீரென வந்து விழும் இனிப்புச்சுவையால், வாயில் இருக்கும் நரம்பு முனைகள் தூண்டப்படுகின்றன. இதனால் விக்கல் விலகுகிறது.

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் சத்து இருக்கிறது. குளித்து முடித்ததும், சருமம் மென்மையாக இருக்கும் நேரத்தில் சுத்தமான ஆலிவ் எண்ணெயை லேசாக உடலில் தடவிக் கொண்டால், தோலின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். எக்ஸிமா போன்ற சரும நோய்கள் வராது.

வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க நிறைய தயிர் சாப்பிட வேண்டுமாம். நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தயிரில் நிறைய உண்டு. வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாக்களை இவை அழிக்கின்றன. எனவே சுவாசம் இனிமையாகிறது.


சேற்றுப்புண் போன்ற பாதநோய்களுக்கு சிறந்த மருந்து லிஸ்டரின். ஆமாம். உலகெங்கும் மவுத்வாஷாக அறியப்படும் லிஸ்டரினில் ஆன்ட்டிசெப்டிக் மற்றும் நோய்த் தொற்றை அகற்றும் குணங்கள் உண்டு. ஒரு நாளைக்கு இரண்டு முறை 15 நிமிடங்கள் பாதத்தை லிஸ்டரின் கலந்த நீரில் ஊறவைத்தால் பாதநோய்கள் பக்கத்தில் வராது!
வங்கி துவங்க உரிமம் கோரிஅஞ்சல் துறை விண்ணப்பம்


புதுடில்லி:ரிசர்வ் வங்கி, புதிய வங்கி துவங்குவதற்கு உரிமம் வழங்க உள்ளது. இதற்கு விண்ணப்பம் அளிப்பதற்கு, ஜூலை 1ம் தேதி கடைசி நாளாகும்.

இதையடுத்து, இந்திய அஞ்சல் துறை, புதிய வங்கி துவங்குவதற்கு, நேற்று முன்தினம் விண்ணப்பித்துள்ளது.இதுகுறித்து, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:புதிய வங்கி துவங்குவதற்கான, அனைத்து தகுதிகளும் அஞ்சல் துறைக்கு உள்ளது. வங்கி துவங்குவதற்கு, ரிசர்வ் வங்கி, உரிமம் அளிக்கும் நிலையில், அது, அஞ்சல் துறைக்கு ஒரு மைல் கல் சாதனையாக அமையும்.

இருப்பினும், இதற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அஞ்சல் துறை நாட்டின் சாதாரண குடி மகன் வரையில், தொடர்பு கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்திய அஞ்சல் துறைக்கு வங்கி உரிமம், கிடைக்கும் நிலையில், முதல் ஆண்டில், 50 கிளைகள் துவங்க திட்டமிட்டுள்ளது. அடுத்த, ஐந்து ஆண்டுகளில், இந்த எண்ணிக்கையை, 150 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை, வங்கி துறையில் களமிறங்கும் நிலையில், அதற்கு, 1,900 கோடி ரூபாய் (500 கோடி ரூபாய் அளிக்கப் பட்ட பங்கு மூலதனம் உட்பட), நிதி தேவைப்படும். மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு பின், இந்த நிதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என, இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரி

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே




படோசனா: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமே. அங்கு ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள், சூழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழும் சூழல் குறித்து ஆராய அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலமானது அங்கிருந்து பாறைகளின் மாதிரிகளை சேகரித்து, அதன் மூலக்கூறுகள், வேதிக் கட்டமைப்பு தகவல்களை கடந்த மாதம் பூமிக்கு அனுப்பியது. இதில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை வேதிப் பொருட்களான சல்ஃபர், நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் உள்ளிட்டவைகள் தேவையான அளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாறைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் முன்னதாக நதியோ அல்லது ஏரியோ இருந்ததும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்தது உண்மையே என்றும், எதிர்காலத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. க்யூரியாசிட்டிக்கு முன் செவ்வாய் கிரகத்தின் இன்னொரு பகுதியில் தரையிறங்கிய மார்ஸ் எக்ஸ்பிரஸ், அங்குள்ள மிகப் பெரிய ஆற்றின் படத்தை அனுப்பியது நினைவிருக்கலாம். இந்த ஆறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓடிக் கொண்டிருந்தது. இப்போது ஈரமிக்க மணற்பரப்பும் ஆற்றின் வழித்தடமும் மட்டும் அப்படியே உள்ளதைப் படம் பிடித்திருந்தது.

உடல் ஆரோக்கியத்திற்கு உலர் திராட்சைகளை சாப்பிடுங்க

உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. மேலும் பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவையான உடல் வலிமையை உலர் திராட்சை தருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்கமளிக்க கூடிய உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

உலர் திராட்சையில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக்கட்டு பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம்.


மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.
தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் டாக்டர்கள் எச்சரிக்கை

பெண்களுக்கு தினமும் 6 மணி நேர தூக்கம் அவசியம். சரியாக தூங்காவிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். பெண்களின் தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செரில் தாம்சன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 40-50 வயது பெண்கள் 412 பேரின் மருத்துவ விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முக்கியமாக, இரவில் அவர்கள் எவ்வளவு நேரம் தூங்குகின்றனர் என்ற தகவலும் பெறப்பட்டது.

ஆய்வில் தெரியவந்த தகவல் பற்றி செரில் தாம்சன் கூறியதாவது:

பொதுவாகவே, எல்லாருக்கும் தினமும் 6 மணி நேர தூக்கம் அவசியம். பெண்களும் கட்டாயம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். வேலை பளு, மன உளைச்சல் போன்ற காரணங்களால் பல பெண்கள் போதிய அளவு தூங்குவதில்லை. இரவு தூக்கம் 6 மணி நேரத்தைவிட குறைந்தால், எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படும்.


தூக்கம் சரியாக வராவிட்டால் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். போதிய நேரம் தூங்காத பெண்களை மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம். ஆன்கோ டைப் டிஎக்ஸ் வகை கேன்சர் கட்டிகள் மெல்ல இவர்களை தாக்கத் தொடங்கும். ஏற்கனவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்கள், நோய் பாதிப்பில் இருந்து ஓரளவு விடுபட்டவர்கள் ஆகியோருக்கும் போதுமான தூக்கம் அவசியம். அவர்கள் தினமும் 6 மணி நேரம் தூங்காவிட்டால், மார்பக புற்றுநோய் மீண்டும் தீவிரமாகும் அபாயம் இருக்கிறது. இவ்வாறு செரில் தாம்சன் கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு
   சென்னை, ஜூன் 29:பெட்ரோல் விலை  நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2.32 உயர்ந்தது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.71.71 ஆனது. டீசல் விலை அடுத்த வாரம் உயரும் என தெரிகிறது.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொருத்து பெட்ரோல் விலையை மாற்றி அமைத்து வருகிறது.

இதன்படி கடந்த 16–ந்தேதி பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ.2.54 உயர்ந்தது. அதன்பின்னர் 30–ந்தேதி நள்ளிரவு தான் பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆனால் நேற்றே பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 உயர்த்தப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் இந்த பெட்ரோல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.


சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 ரூபாய் 32 காசு உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 71 ரூபாய் 71 காசாக ஆனது
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.728 சரிந்த தங்கம் விலை


சென்னை : சென்னையில் காலை நேர வர்த்தகத்தில் சவரனுக்கு ரூ.592 குறைந்த தங்கத்தின் விலை மாலையில் மேலும் சரிந்துள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.728 குறைந்துள்ளது. இதே போன்று பார்வெள்ளி விலையும் சரிவுடனேயே காணப்படுகிறது. சென்னையில் இன்று காலை ரூ.2396 ஆக இருந்த ஒரு கிராம்(22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை மாலையில் ரூ.2379 ஆக இருந்தது. ரூ.25,625 ஆக இருந்த 10 கிராம்(24 காரட்) தங்கமும் ரூ.25,440 ஆக குறைந்தது. காலையில் ரூ.19,168 ஆக இருந்த ஒரு சவரன் தங்கம், மாலையில் ரூ.19032 ஆக உள்ளது. காலையில் ரூ.42.10 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லை. அதேசமயம் ரூ.39,360 ஆக இருந்த பார்வெள்ளி ரூ.39,320 ஆக குறைந்தது.