Monday 8 July 2013

சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்


* வைட்டமின்கள்- நிறைந்த பப்பாளிப் பழத்தின் தோலைசீவி அதை நன்கு கூழ் போல ஆக்கி முகத்தில் 'பற்று"போலப் போட சருமத்தின் நிறம் கூடும். சருமம் பட்டுப்போல மென்மையாகும்.

* ஆப்பிள் பழம் வைட்டமின் நிறைந்தது. இதையும் தோல் சீவி கூழ்போல ஆக்கி முகத்தில் 'பற்று" போல போட முகத்தில் வரும் கரும்புள்ளிகள் நீங்கும்.

* சாத்துக்குடி பழமும் சி -வைட்டமின் செறிந்தது தான். இதன் மேல்தோல், உள்தோல் இரண்டையுமே உரித்து அதை நன்கு பிசைந்து அதை முகத்தின் மீது அப்படியே வைக்கலாம். அல்லது இதன் சாற்றை முகத்தில் தடவலாம். முகத்தில் அதிகம் உள்ள எண்ணெய் பசையைஇது நீக்கி- சருமத்தைப் பாதுகாக்கும்.

* ஆரஞ்சு(கமலா) பழமும் வைட்டமின் -சி நிறைந்தது. இதைசாத்துக்குடியைச்செய்வது போலச் செய்யலாம். இதன் சாறு சருமத்திற்கு பளபளப்பு தரும்.

* கொய்யாப்பழமும் வைட்டமின் -சி அதிகம் கொண்டது. இதை நன்கு கூழ்போல ஆக்கி முகத்தில் போட முகம் பளபளக்கும். நிறம் மேம்படும்.

* எல்லா காலங்களிலுமே கிடைக்கும். வாழைப்பழம் உலர் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதை கூழ்போல ஆக்கி முகத்தில் பேக் போலப் போட வேண்டும். உலர் சருமம் உடையவர்களும், 40 வயது தாண்டியவர்களும் இதைப் பயன்படுத்தலாம்.

* இந்த 'பேக்கு"களை பருக்கள் இருக்கும் போது கூட பயன்படுத்தலாம். இதைப் போட்ட பின்பு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறி பின்பு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம்.


பழங்களைப் போலவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளையும் கூட நாம் சருமத்திற்குப்பயன்படுத்தலாம்.

இன்சூரன்ஸ் நிறுவனங்களின் 1000 கிளைகள் மூடல்


 நெல்லை : தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், 1000க்கும் மேற்பட்ட கிளைகளை மூடிவிட்டன. ரூ.19 ஆயிரம் கோடி அளவுக்கு பாலிசிகளை 6 கம்பெனிகள் சரண்டர் செய்துள்ளன என நெல்லையில் நடந்த எல்ஐசி கோட்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதுநெல்லை கோட்ட எல்ஐசி ஊழியர் சங்க 2 நாள் மாநாடு, பாளையங்கோட்டையில் நேற்று துவங்கியது. மாநாட்டிற்கு கோட்ட தலைவர் மதுபால் தலைமை வகித்தார். சிஐடியூ மாநில செயலா ளர் மோகன் வரவேற்றார்.

இணைச் செயலாளர் ரமேஷ் துவக்கி வைத்து பேசினார். பொது செயலாளர் சுவாமிநாதன் மற்றும் புஷ்பராஜன், மதுரை கோட்ட செயலா ளர் சுரேஷ்குமார், பீட்டர் இருதயராஜ், முருகேசன் ஜெயராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். என்எல்சி பங்கு விற்பனை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். என்எல்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எல்ஐசி நிறுவனம் இந்த ஆண்டு 5 நிலைகளிலும் முன்னேறியுள்ளது. பாலிசி உரிமம் வழங்குவதில் இந்த ஆண்டு அடைந்த முன்னேற்றம் கடந்த 11 ஆண்டுகளில் ஒரு மைல்கல் எனலாம். ஆனால், தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இதுவரை ஆயிரம் கிளைகளுக்கு மேல் மூடியுள்ளது. 2012,13ம் ஆண்டில் மட்டும் ரூ.19 ஆயிரம் கோடி அளவுக்கு பாலிசிகளை 6 கம்பெனிகள் சரண்டர் செய்துள்ளன என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.


இந்த சூழலில் மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டு உயர்வு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குமாரசாமி நன்றி கூறினார். இன்று 2வது நாள் மாநாடு நடக்கிறது.