Thursday 27 June 2013

ஆரோக்கியம் தரும் உணவுகள்








பாதாம் பால், குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்ககூடிய சிறந்த உணவாகும். பாதாம் பால் தோல் நிறத்தை அதிகரிக்க செய்து முகத்திற்கு பொழிவை தருகிறது.. பாதாமை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள்  மேம்படுவது மட்டுமல்லாமல் தசைகளை வலுவடையச்செய்கிறது. மேலும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் பாதாம் உதவுகிறது.

பேரீச்சம்பழம்:

பாலை நன்கு கொதிக்க வைத்து பேரீச்சம்பளத்தை அதில் கலந்து தினமும் இளம்பெண்கள், வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்  சாப்பிடவேண்டும். இது சிறந்த மருத்துவ பலன்களை கொண்டது. இரும்புசத்து மற்றும் நார்சத்து அடங்கியுள்ள பேரீச்சம்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கிறது. உடலில் உள்ள ஹார்மோன்களில் நிலையை சரிசெய்ய உதவுகின்றது.. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் கொண்ட பெண்கள் தினமும்  பாலுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை போட்டு கொதிக்க வைத்து பாலுடன் தேன் கலந்து ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை  நீங்கும்..

அக்ரூட் பருப்பு:

உடல் பருமனாக காணப்படுபவர்கள் உடலை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பினால் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவது நல்லது. இதை  சாப்பிட்டால் உடல் எடையை குறைத்து கொள்ளலாம் மேலும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அக்ரூட் பருப்புகள் மிக நல்லதுஅக்ரூட் பருப்புகள் ரத்த ஒட்டத்தை சீராக்கி மனஅழுத்தத்தை குறைக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.

உலர்திராட்சை:

இரும்புசத்து கொண்ட உலர்திராட்சை பழத்தை இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடலாம். உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு எடை  குறைவாக இருந்தால் நாளும் 5 உலர் திராட்சைகளையாவது சாப்பிடகொடுங்கள். பின்னர் உங்கள் குழந்தையின் எடை அதிகரிப்பதை பார்க்கலாம்செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கபடுபவர்கள் உலர் திராட்சை பழங்களை சாப்பிடலாம்.

முந்திரி பருப்பு:


முந்திரி பருப்பு இயற்கையின் அதிசயம். இதில் வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நார் புரதம், ஆகிய சத்துகளைகொண்டது. முந்திரி  இதயத்தை பாதுகாப்பதோடு இதயம் சம்பந்தமான அனைத்து நோய்க்கும் சிறந்தது முந்திரி பருப்பு.
குற்றாலத்தில் களை கட்டிய சீசன் பாழடைந்த நிலையில் பேரூராட்சி விடுதிகள் தங்க வசதியின்றி சுற்றுலா பயணிகள் தவிப்பு

தென்காசி, : குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பேரூராட்சி விடுதிகள் தங்குவதற்கு தகுதியற்று பாழடைந்த நிலையில் கிடக்கின்றன.
   தமிழகத்தில் வேறு எந்த சுற்றுலா தலத்திலும் இல்லாத வகையில் குற்றாலத்தில் தான் மெயி
னருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலிய ருவி, நெய்ய ருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி என 9 அருவிகள் அருகருகே அமைந்துள்ளன.
   இதில் செண்பகாதேவி, தேனருவிகளில் மட்டும் சமீபகாலமாக குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதே போல சிற்றருவியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற அருவிகளில் இலவசமாகவே சுற்றுலா பய ணிகள் குளிக்கலாம்.
கேரளாவில் உள்ள கும்பாவுருட்டி, மனலாறு, பாலாறு போன்ற அருவிகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வருக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே, ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் குற்றாலத்திற்கு சீசனை அனுபவிக்க படையெடுத்து வருகின்றனர்.
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில் தங்கி சீசனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குற்றாலம் பேரூ ராட்சி சார்பில் தென்காசி சாலை தங்கும் விடுதி, செங்கோட்டை சாலை தங்கும் விடுதி, மல்லிகை விடுதி, அருவி இல்லம், முல்லை விடுதி, ரோஜா காட்டேஜ், மெயினருவி பகுதியில் தங்கும் குடில்கள் கட்டப்பட்டன.
மிகவும் காற்றோட்ட மாக, விசாலமான முறை யில் இரண்டு படுக்கை, மூன்று படுக்கை, நான்கு படுக்கை, சமையலறையுடன் கூடிய குடில்கள் என விதவிதமாக விடுதிகள் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டன. இவற்றில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
ஆனால், நீண்டகால மாக இவை சரிவர பராமரிக்கப்படாததால் அறைகளில் உள்ள பர்னிச்சர்கள், கட்டில், மெத் தைகள், விரிப்புகள், வாஷ் பேசின், கழிப்பறைகள், தண்ணீர் பைப்கள், கதவு கள், ஜன்னல்கள் போன் றவை சிதிலமடைந்து கிடக் கின்றன.
இவற்றில், மெயினருவி குடில்கள் மட்டும் இதில் சற்று விதிவிலக்காக உள்ளது. அங்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் தங்க முடியும் என்ற நிலை உள்ளது.
அதிலும் கலெக்டருக்கு ஒரு அறை, எஸ்பிக்கு ஒரு அறை என ஒதுக்கப்பட்டு, பெரும் பாலும் அவை பூட்டியே கிடக்கிறது.
இதர அறைகளில் மட்டும் சுறறுலா பயணிகள்
தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால், நடுத்தர மக் கள் அதிக வாடகை கொடுத்து தனியார் விடுதிகளில் சிறிய அறைகளில் தங்க வேண்டிய நிலை உள் ளது. இதனாலேயே குற்றாலத்தில் வீடுகள் எல்லாம் விடுதிகளாக செயல்படுகின்றன.

சுற்றுலாத்துறையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றாலத்தை பெரிய அளவில் கண்டுகொள்ளவே இல்லை. போதிய நிதியும் ஒதுக்கவில்லை. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பேரூராட்சி தங் கும் விடுதிகள் பாழடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளது. பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, அரசின் கவனத்துக்கு இதை கொண்டு சென்று, விடுதிகளை புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் எனவும், இதன்மூலம் பேரூராட்சிக் கும் கணிசமான வருவாய் கிடைக்கும் எனவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
செங்கோட்டை ரயில் நிலையத்தை சுற்றிலும் புதர்க்காடுகள் விஷ ஜந்துகள் நடமாட்டத்தால் மக்கள் பீதி
            
     செங்கோட்டை, : செங்கோட்டை ரயில் நிலையத்தை சுற்றி வளர்ந்துள்ள புதர்களால் விஷ ஜந்துக்களின் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக பயணி கள் அச்சம் தெரிவிக்கின்றனர்
தமிழக & கேரள எல்லை யில் அமைந்துள்ளது செங்கோட்டை ரயில் நிலையம். நாள்தோறும் இங்கிருந்து சென்னைக்கு பொதிகை விரைவு ரயிலும், மதுரைக்கு 3 முறை, நெல்லைக்கு இருமுறை என பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இப்பகுதியில் குற்றால சீசன் களை கட்டியுள்ளதால் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
 இந்நிலையில், ரயில் நிலையத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்காடாக காட்சியளிக்கிறது. இவற்றில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையத்தை சுற்றி வளர்ந்துள்ள புதர்களை அகற்றி பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் ரயில் நிலை யத்தை சுற்றி ஏராளமான ரயில்வே தொழிலாளர்களின் குடியிருப்பும் உள் ளது. அதனை சுற்றி ஆளுயரத்திற்கு மேல் வளர்ந்துள்ள செடி, கொடிளுக்குள் எலிகள் மற்றும் பாம்புகள் அதிக அளவில் பதுங்கியிருப்பதாக ஊழியர்களின் குடும்பத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ரயில்வே நிர்வாகம் ரயில் நிலையத்தை சுற்றியும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் முளைத்துள்ள புதர்களை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இருமல், ஜலதோஷமா இயற்கை மருந்து இருக்கு









குளிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது ஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் என மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக நீங்களே உங்களது வீட்டில் உள்ள சமையலறை பொருட்கள் மற்றும் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாமே.. பணமும் மிச்சம், நோயும் குணமாகிவிடும். சளி பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் நீங்களே மருந்து தயாரித்து சாப்பிடலாம். வீட்டிலே என்னனென மருந்துகள் தயாரிக்கலாம் என பார்க்கலாமா.   

இஞ்சி வேர்

இயற்கை மருத்துவத்தில் சிறந்தது இஞ்சி. இதன் சாறு தொண்டை வலிக்கு சிறந்தது. இஞ்சியை இரண்டு அங்குலம் நன்கு சுத்தம் செய்து இஞ்சிக்கு தகுந்தாற் போல தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து இஞ்சித் துண்டுகளை அம்மியில் வைத்து விழுதாக அரைத்து கொதிக்கும் சுடுதண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து பானம் தயாரித்து வடிகட்டி பருகலாம் சுவை சேர்க்க விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம். நோய்தொற்று இருப்பின் ஜலதோஷம் நீங்கும் வரை ஒரு நாட்களுக்கு மூன்று வேளை இந்த தேநீரை பருகினால் தொண்டை வலி எளிதில் குணமாகும்.

யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயில்

ஜலதோஷம் ஏற்பட்டால் மூக்கில் சளி வடிதல் பெரிய பிரச்சனையாக இருக்கும் இந்த பிரச்சனையை போக்க யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயில் பயன்படுத்தலாம்.. எப்படி பயன்படுத்தலாம் யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயிலை நன்கு கொதிக்கும் சூடான நீரில் ஐந்து முதல் ஆறு சொட்டுகள் சேர்த்து போர்வையால் ஆவி வெளியே போகாதவாறு மூடிக்கொண்டுஆவி பிடிக்க வேண்டும். இதை மூன்று வேளை செய்தால் தலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் ஆவி வழியாக வெளியாகிவிடும் சளி பிரச்சனை நீங்கிவிடும்..

எல்டர் ஃப்ளவர் தேநீர்

தேநீர் பருகியும் ஜலதோஷத்தை குணப்படுத்திவிடலாம். அதாவது எல்டர்ஃப்ளவரில் தயாரிக்கப்படும் தேநீர் ஜலதோஷத்தை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. எல்டர்ஃப்ளவரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திய போது நேர்மறையான பண்புகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இதை சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். எல்டர்ஃப்ளவர் பூக்களை காய வைத்து சூடு நீரில் கொதிக்க வைத்து ஒரு கப் பூக்களை போட்டு தேயிலை சேர்த்து கொதி வந்ததும் இறக்கி பருகலாம் விருமம்பினால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்..


உடல் நலத்தை பாதுகாக்க வீட்டிலே இருக்குது பல மருந்துகள் அதனை தகுந்தவாறு பயன்படுத்தி நோய்களை போக்கலாம். பணத்தையும் சேகரிக்கலாம். இயற்கை மருத்துவத்தை விட சிறந்தது வேறெதுவும் இல்லை..
எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து


எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில்  இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.   

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.


வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை


அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள்தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை  அவசியம் சாப்பிட வேண்டும்.

எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறதுஅதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டதுகுடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.

பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள்  பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ்வைட்டமின் , பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு  விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும்  புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு  சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும்  பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.


கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.

குளிர்ச்சி தரும் வேப்பம்பூ

வேப்பமரம் நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு மூலிகை செடியாக கருதபடுகின்றது. இந்த மூலிகை பல நோய்களுக்கு நிவாரணியாகவும்  சுகாதார நலன்களை வழங்ககூடியதாகவும் உள்ளது.. கத்திரி வெயில் சுட்டெரிக்கிறதால வெப்பத்துல இருந்து தப்பிக்க குளிர்ச்சியான உணவுகளை  உட்கொள்வது ரொம்ப அவசியம்.

தர்பூசணி, இளநீர் வரிசையில வேப்பம்பூவும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு தாங்க. வேப்பம்பூவை பொடியாக்கி ரசம், பச்சடி வைத்து சாப்பிடலாம்கண் பிரச்சனைகளான மாலை கண் நோய், விழி வெப்பமண்டல அழற்சி போன்ற கண் பிரச்சனைகளை வேம்பு பயன்படுத்தி தடுக்கலாம். தோல்  அழற்சி பிரச்சனைகளுக்கு வேம்பு இலைகளை அரைத்து சாறாக பிழிந்து அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் அலர்ஜி நீங்கிவிடும்.

உங்களுக்கு சருமநோய் தொற்று இருப்பின் வேப்பிலை குளியல் எடுத்து கொண்டால் சரும பிரச்சனைகளை தடுக்க முடியும். அஜீரணக்கோளாறுவயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்களால் அவதி படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் அவர்களுக்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்கும். உடலில் அளவுக்கு அதிகமாக புளிப்பு தன்மை, மேல் இரைப்பை வலி இருப்பின் அதை சரிசெய்ய வேம்பு  பரிந்துரைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இரத்த சுத்திகரிப்பு நச்சு பொருட்களை அழிக்ககூடியதாகவும் இருக்கிறது..

வாயில் ஏற்படக்கூடிய பற்சிதைவு, மூச்சு பிரச்சனை, புண், ஈறுகளில் ரத்தம், போன்றவற்றை வேம்பு கொண்டு சரி செய்திடலாம். பாலிசாக்கரைடுகளை  அதிகம் கொண்டுள்ள வேம்பு புற்றுநோய் கட்டிகள், லிம்ஃபோசைடிக் லுகேமியாவை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மூட்டுவலிதசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் மூட்டு வலி எளிதில் குணமாகும். பாலிசாக்கரைடுகளை, கேட்டச்சின்கள், மற்றும்  ஃபிளாவனாய்டுகளின் வலி நிவாரணிகளுக்கு வேம்பு பயனுள்ளதாக இருக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க  கசப்பு சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது மேலும் இரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேம்பினை வாரத்தில் ஒரு நாள் வேகவைத்தோ அரைத்தோ எடுத்துகொள்ளலாம். வேப்பம் பூ ரசம்  எவ்வாறு செய்வது

துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப், தக்காளி - 2, புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிது, உப்பு, நெய் - தேவைக்கேற்ப. பொடிப்பதற்கு: மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2. தாளிக்ககடுகு - அரை டீஸ்பூன், வேப்பம் பூ - 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 1 நெல்லிக்காய் அளவு.

புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு (வெல்லம் கரைத்தது), பெருங்காயம், கறிவேப்பிலை  சேர்த்துக் கரைத்து, பொடித்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீர் சேர்த்து, நுரைத்து  வரும் போது, நெய்யில் கடுகு, வேப்பம் பூ சேர்த்துப் பொரித்து ரசத்தில் சேர்க்கவும். இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.


வேப்பம்பூ ரசம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பார்வை சம்பந்தமான வியாதிகள் நிவர்த்தியாகும்.உடலை உஷ்ணத்தில் இருந்து  காப்பாற்றும். ரத்த ஓட்டம் சீராகும். வேப்பம்பூ பச்சடி சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதனால உங்க வீட்டுல வேப்பம்பூ ரசம்பச்சடி வச்சி அசத்துங்க.