மருதாணியின் மூலிகை மருத்துவம்
மருதாணி இலை கிருமி
நாசினி, கண்ணுக்குப்
புலப்படாத கிருமிகளை
அழிக்கும் சக்தி
கொண்டது மருதாணி.
நகசுத்தி வராமல்
தடுக்கும், புண்களை ஆற்றவும் நல்ல
மருந்து. கை,
கால், விரல்
நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகுபடுத்தலாம்..
பால்வினை நோயான மேக
நோய்க்கு இது
சிறந்த மருந்து.
இதன் இலை
10 கிராம், 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம்
மஞ்சள் ஆகியவற்றை அரைத்து
நாளும் வெறும்
வயிற்றில் குடித்துப்
பால் அருந்தவும்.
புளி, புகை,
காரம் கூடாது,
இதனால் மேக
நோய் அதனால்
ஏற்படும் புண்,
அரிப்பு
ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.
இரும்பு வாணலியில் தேங்காய்
நெய் 500 மி.லி. விட்டு
இதன் இலை
100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின்
சாறு எண்ணெயில் சேர்த்து
சிவப்பாக மாறிவிடும்.
நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத்
தூள் போடலாம்.
அரைத்துப் போட்டுக்
காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க
முடி வளரும்
நரைமாறும்.
தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை
சாப்பிடுதல் கூடாது. மருதாணிப் பூவினை ஒரு
துணியில் சுற்றி,
தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம்
வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
ஒரு சிலருக்கு
இம்மணம் தலைவலியை
உண்டாக்கும்.
கரும்படை, வண்ணான் படை
கால் இடுக்கிலும்,
இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும்.
இதற்கு ஒரு
பிடி மருதாணி
இலையுடன் 5 கிராம் 501 பார் கதர்
சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி
வந்தால் கரும்படை
யாவும் சுகமடையும்.
10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனை
மருந்தாகப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment