Tuesday 2 July 2013

தோனியின் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா கோலியால்!?




மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கையை இந்தியா எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வி தழுவியதையடுத்து இந்தப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்தியா தரப்பில் மிகப்பெரிய பின்னடைவு தோனி இந்தத் தொடரில் இனி விளையாட முடியாமல் போனதே. கோலியின் கேப்டன்சி எதிர்பார்ப்புகளுக்கு விடுக்கப்பட்ட சவாலாகும் இந்தப் போட்டி.

பாகிஸ்தானை இந்தியா பல்வேறு காரணங்களுக்காக கழட்டி விட்ட நிலையில் அதிகம் இலங்கையுடன் இந்தியா விளையாடியுள்ளது கடந்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளும் தங்களுக்கிடையே 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்தியாவுக்கே வெற்றி அதிகம். ஏதோ ஒரு விதத்தில் தோனி வந்தபிறகே இலங்கையால் இந்தியாவுக்கு எதிராக சோபிக்க முடியவில்லை. மேலும் அவர்களது சிறந்த பவுலர் லஷித் மலிங்கா இந்தியாவுக்கு எதிராக சரியாக வீச முடியவில்லை. இந்திய பேட்ஸ்மென்களுக்கு அவரது கையும் பந்து வீச்சும் பழகிவிட்டது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.


தோனிக்கு பதிலாக அம்பாட்டி ராயுடு வந்துள்ளார். ஆனால் அவரை உடனடியாக அணியில் சேர்ப்பார்களா இல்லை முரளி விஜையை அணியில் சேர்ப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment