Saturday 6 July 2013

மத்திய அரசு அனுமதி சென்னை ஏர்போர்ட் தனியார்மயம்

 புதுடெல்லி: சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை தனியார்மயப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

நாடு முழுவதும் 15 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மும்பை, டெல்லி விமான நிலையங்களின் பழைய முனையங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) நிர்வகிக்கிறது. இதன் அடுத்தகட்டமாக சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களின் பழைய முனையங்கள் தனியார்மயமாக்க, அமைச்சகங்களுக்கு இடையேயான குழு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இவ்விரு விமான நிலையங்களிலும் உள்ள புதிய முனையங்கள், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தொகைக்கு, தனியார் நிறுவனங்களுக்கு லீசுக்கு அளிக்கப்படும்.

No comments:

Post a Comment