குற்றாலத்தில் வெயில் தலைகாட்டியது
*அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றாலம் : குற்றாலத்தில் தொடர்ந்து
தலைகாட்டி வந்த
வெயிலினால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்த வண்ணம்
இருந்தபோதிலும் சுற்றுலாப் பயணிகள் மெயினருவியில் வரிசையில்
நின்று குளிக்க
அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்தில் கடந்த
வாரம் மலைப்பகுதியில்
வெளுத்துவாங்கிய கனத்த மழையின் காரணமாக அருவிகளில்
தண்ணீர் ஆர்ப்பரித்து
கொட்டியது. தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக
தடைவிதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தடை
விலக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம்
குற்றாலத்தில் பரவலாக வெயில் காணப்பட்ட நிலையில்
நேற்றும் மதியம்
வரை வெயில்
தொடர்ந்து தென்பட்டது.அருவிகளில் பரவலாக
தண்ணீர் விழுந்த
நிலையில் சுற்றுலாப்
பயணிகள் மெயினருவியில்
வரிசையில் நின்று
குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஐந்தருவி, பழையக்குற்றாலத்தில்
அருவிகளில் சற்று அதிகமாக தண்ணீர் விழுந்ததால்
சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நேற்று மாலைக்கு
பிறகு மெல்லிய
தென்றல் காற்றுடன்,
லேசான சாரலும்
ஆங்காங்கே பெய்தவண்ணம்
இருந்தது. மலைப்பகுதியில்
வானம் மேக
மூட்டத்துடன் காணப்பட்டதால் மழை பெய்யக்கூடும் என
எதிர்பார்க்கப்பட்டது.
No comments:
Post a Comment