சூரியகாந்தி விளைச்சல் அமோகம்
குவிண்டால் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
சுரண்டை, : சுரண்டை பகுதியில்
சூரியகாந்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால்
விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு
குவிண்டால் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
நெல்லை மாவட்டம் சுரண்டை
பகுதியில் கடந்த
ஆண்டு பருவமழை
பொய்த்து விட்டது.
இதனால்
சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்ததால்
விவசாயிகள் பாதிப்படைந்தனர்.
இருப்பினும் ஒரு சில
விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டபோதிலும்,
நிலத்தில் நீர்பிடிப்பு
இல்லாததால் சிரமத்தை எதிர்கொண்டனர். இதையடுத்து விவசாயிகள்
சூரியகாந்தி பயிர் செய்வதில் ஆர்வம் செலுத்தினர்.
சுரண்டை, சுந்தரபாண்டியபுரம்,
மேலப்பாவூர், கீழப்பாவூர், துவரங்காடு, வெள்ளக்கால், குருங்காவனம்,
மற்றும் சுற்றுப்புற
பகுதி விவசாயிகள்
அதிகளவில் சூரியகாந்தி
பயிரிட்டுள்ளனர். குறைந்த செலவில் அதிக லாபம்
ஈட்டலாம் என்பதால் சூரிய காந்தியை ஆர்வமுடன்
சாகுபடி செய்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி மாடசாமி
கூறுகையில், ‘தற்போது மழை சரிவர பெய்யாததால்
வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலத்தில்
நீர்பிடிப்பு தன்மை குறைந்துவிட்டதால் சூரியகாந்தி சாகுபடி
செய்துள்ளோம்.
இதற்கு அதிகப்படியான தண்ணீர்,
உரம் தேவைப்படாது
என்பதால் எங்களுக்கு
செலவு குறைவு.
பயிர் செய்த
90 நாளில் இருந்து
120 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி
விடுகிறது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு கூடுதல்
மகசூல் கிடைத்துள்ளது.
அத்துடன் அதிக
லாபமும் கிடைக்கிறது.
ஒரு குவிண்டால்
ரூ.3 ஆயிரம்
வரை விற்பனையாகிறது‘
என்றார்.
No comments:
Post a Comment