Tuesday 25 June 2013

ஐசிசி. கனவு அணிக்கு தோனி கேப்டன்!

ஐசிசி. கோப்பைகள் அனைத்தையும் வென்ற உலகின் தலை சிறந்த கேப்டனாக உருவெடுத்திருகும் இந்திய கேப்டன் தோனி .சி.சி.யின் கனவு ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக கவுரவிக்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (.சி.சி) கனவு அணியை வெளியிட்டுள்ளது. இதில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திறமையான கேப்டன் என்ற அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், .சி.சி. மேட்ச் நடுவருமான ஸ்ரீநாத், .சி.சி. பொதுமேலாளர் ஜெப் ஆல்டரைஸ், பாகிஸ்தானை சேர்ந்த .சி.சி. நடுவர் அலிம்தர் உள்பட 5 பேர் கொண்ட .சி.சி. கனவு அணியை தேர்வு செய்துள்ளது.

இந்த அணியில் ஷிகார் தவான், வீராட் கோலி, ரவிந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார் ஆகிய 4 இந்திய வீரர்களும் இடம் பிடித்தனர்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட .சி.சி. கனவு அணி வருமாறு:


1. ஷிகார் தவான் 2. ஜோனதன் டிராட் (இங்கிலாந்து), 3. சங்ககரா (இலங்கை), 4. வீராட் கோலி (இந்தியா), 5. மிஸ்பா-உல்-ஹக் (பாகிஸ்தான்), 6. தோனி (கேப்டன்), 7.ரவிந்திர ஜடேஜா (இந்தியா), 8. மெக்லரன் (தென்ஆப்பிரிக்கா), 9.புவனேஸ்வர்குமார் (இந்தியா), 10. ஆண்டர்சன் (இங்கிலாந்து), 11. மெக்லென் ஹான் (நியூசிலாந்து). 12. ஜோரூட் (இங்கிலாந்து).

No comments:

Post a Comment