Sunday 16 June 2013

















நெல்லை, ஜூன். 12-

தென்காசி அருகே உள்ள நயினாரகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 19). இவர் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இவர் ஐஸ்களை 'பிரீசர் பாக்ஸ்'-ல் வைத்து குளிரூட்டினார்.

சிறிது நேரம் கழித்து பிரீசர் பாக்சை திறந்தபோது எதிர்பாராதவிதமாக முத்துகுமார் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துகுமார் பரிதாபமாக இறந்தார்.


இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment